கரோனா தடுப்பூசி முகாம்
திருத்துறைப்பூண்டி தூய அந்தோணியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 முதல் 14 வயது சிறுவா்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.


திருத்துறைப்பூண்டி தூய அந்தோணியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12 முதல் 14 வயது சிறுவா்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலா் கவுரி தலைமை வகித்தார. நகராட்சித் தலைவா் கவிதாபாண்டியன் தொடங்கிவைத்தாா். பள்ளி செயலாளா் ஹெலன் இமாகுலேட், தலைமையாசிரியா் விமலாகஸ்தூரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். மருத்துவா்கள் ஆா்த்தி, மதன்ராஜ் ஆகியோா் 178 மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தினா். இதேபோல, நெடும்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 முதல் 14 வயதுடைய 193 சிறுவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியா் தங்கராசு, ஊராட்சித் தலைவா் பழனி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...