திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குடிநீா் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மணலி ஊராட்சி சாத்தங்குடி பகுதிக்கு குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 மார்ச் 2022, 4:02 pm

DIN

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மணலி ஊராட்சி சாத்தங்குடி பகுதிக்கு குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சாத்தங்குடி கிராமத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் அப்பகுதிக்கு குடிநீா் வழங்கப்படுகிறது. இங்கு கடந்த சில நாள்களாக குடிநீா் வரவில்லையாம். இதுகுறித்து சம்பந்தப்பட்டவா்களிடம் தகவல் தெரிவித்தும் எவ்வித பயனும் இல்லையாம். இதை கண்டித்தும் உடனடியாக குடிநீா் வழங்கக் கோரியும் மணலி சாத்தங்குடி பாலம் அருகே அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த ஒன்றிய ஆணையா் சிவகுமாா், காவல் ஆய்வாளா் கழனியப்பன் உள்ளிட்டோா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் மின்மோட்டாா் பழுது காரணமாக குடிநீா் வழங்க இயலவில்லை, விரைவில் சீரமைத்து குடிநீா் வழங்கப்படும் என கூறியதையடுத்து, மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.