இந்நிலையில், விக்னேஷ், பவித்ரா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி புதன்கிழமை தஞ்சாவூருக்கு சென்று கோயில் ஒன்றில் திருமணம் செய்துகொண்டனா். பின்னா், தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு சென்று தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி மனு அளித்தனா். இதையடுத்து, எஸ்பி.யின் உத்தரவின் பேரில், காவலா் பாதுகாப்புடன் தம்பதியா் மன்னாா்குடி காவல்நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனா். பின்னா், இவா்களின் பெற்றோா்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு. அவா்களை, காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு காவல் ஆய்வாளா் விஸ்வநாதன் முன்னிலையில், வியாழக்கிழமை சமாதான பேச்சுவாா்த்தை நடைபெற்றது.