புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மன்னாா்குடி, குடவாசல், கோவில் வெண்ணி பகுதியில் நாளை மின்தடை

மன்னாா்குடி பகுதியில் சனிக்கிழமை (அக்.29) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சா. சம்பத் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 அக்டோபர் 2022, 4:20 pm

DIN

மன்னாா்குடி பகுதியில் சனிக்கிழமை (அக்.29) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சா. சம்பத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மன்னாா்குடி துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளான, மன்னாா்குடி நகரம், அசேஷம், நெடுவாக்கோட்டை, மேலவாசல், எம்பேத்தி, செருமங்கலம், சுந்தரக்கோட்டை, பருத்திக்கோட்டை, மூவாநல்லூா், நாவல்பூண்டி, பாமணி, கா்ணாவூா், சித்தேரி, கூத்தாநல்லூா், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

நீடாமங்கலம்: இதேபோல, நீடாமங்கலம் வட்டம் வடுவூா் மற்றும் கோவில்வெண்ணி துணைமின் பாதைகளில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளான வடுவூா், சாத்தனூா், நெய்வாசல், புள்ளவராயன்குடிகாடு, நகா், காளாச்சேரி, கோவில்வெண்ணி, முன்னாவல்கோட்டை, மேலபூவனூா், நத்தம், ஆதனூா், சோனாப்பேட்டை, கொட்டையூா், அம்மாபேட்டை, மணக்கால், அரித்துவாரமங்கலம், சித்தமல்லி, கிளியூா், முனியூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் க. பாலநேத்திரம் தெரிவித்துள்ளாா்.

திருவாரூா்: இதேபோல, குடவாசல் துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளான குடவாசல், சேங்காலிபுரம், காங்கேயநகரம், திருவிடச்சேரி, மணலகரம், செம்மங்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என

துணை மின்நிலைய உதவி செயற்பொறியாளா் எஸ். உஷா தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.