சேரன்குளத்தில் விடுதலைப் போராட்ட வீரர் பாஷ்யம் அய்யங்காருக்கு நினைவுச் சின்னம்

சேரன்குளத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பாஷ்யம் அய்யங்காருக்கு நினைவுச் சின்னம் திறக்கப்பட்டது.
சேரன்குளத்தில் திறக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் ஆர்யா என்ற பஷ்யம் அய்யங்கார் நினைவுச் சின்னம்
சேரன்குளத்தில் திறக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர் ஆர்யா என்ற பஷ்யம் அய்யங்கார் நினைவுச் சின்னம்

சேரன்குளத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பாஷ்யம் அய்யங்காருக்கு நினைவுச் சின்னம் திறக்கப்பட்டது.

இந்திய சுதந்திரப் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் 26.1.1932 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள சேரன்குளத்தை சேர்ந்த ஆர்யா என்கிற பாஷ்யம் அய்யங்கார் தனது, 25 ஆவது வயதில் சென்னை ஜெயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 200 அடி உயரம் உள்ள கொடி மரத்தில் பிரிட்டிஸ் போலீஸாருக்கு தெரியாமல் நள்ளிரவில் தனி ஆளாக ஏறி அதில் பறந்துகொண்டிருந்த பிரிடிஷ் யூனியன்ஜாக் கொடியை இறக்கி விட்டு. அதற்கு பதிலாக இந்திய தேசியக் கொடியை கட்டி பறக்க விட்டார்.

சுதந்திரப் போராட்ட வீரர் ஆர்யா என்ற பாஷ்யம் அய்யங்கார்.
சுதந்திரப் போராட்ட வீரர் ஆர்யா என்ற பாஷ்யம் அய்யங்கார்.

இதனை நினைவு கூறும் வகையில், பாஷ்யம் அய்யங்காரின் சொந்த ஊரான சேரன்குளத்தில் பாஷ்யம் அய்யங்கார் பெயரில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் திறப்பு விழாவும், 'கோட்டையில் கொடியேற்றிய பாஷ்யம்' என்ற நூல் வெளியிட்டு விழாவும் நடைபெற்றது.

தேரன்குளம் அரசு கிளை நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மன்னார்குடி ஒன்றியக்குழுத் தலைவர் டி.மனோகரன் தலைமை வகித்து நினைவுச் சின்னத்தை  திறந்து வைத்தார். 

நினைவுச் சின்ன கொடி மேடையில் தேசியக் கொடியினை ஊராட்சித் தலைவர் டி.எம்.அமுதா ஏற்றிவைத்தார்.

'கோட்டையில் கொடியேற்றிய பாஷ்யம்' என்ற நூலை மன்னார்குடி கல்வி மாவட்ட அலுவலர் ஆர்.மணிவண்ணன் வெளியிட்டார். நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.தாமோதரன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் யு.எஸ்.பொன்முடி முன்னிலை வகித்தனர்.

இதில், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில துணைப் பொதுச்செயலர் களப்பிரன், கலை இலக்கியப் பெருமன்ற கிளைச் செயலர் க.தங்கபாபு, பாஷ்யம் அன்பவர்கள் வட்ட நிர்வாகி ஆர்.சௌரிராஜன், மகாகவி பாரதி அறக்கட்டளை தலைவர் ஆர்.பூமிநாதன், மன்னை தமிழ்ச் சங்க தலைவர் த.விஜயேந்திரன், தலைமை ஆசிரியர் த.விஜயகுமார், நூலகர் பி.கோவிந்தராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாக்குழுவை சேர்ந்த ஆர்.யேசுதாஸ் ஒருங்கிணைத்தார். வ சேதுராமன் தொகுத்து வழங்கினார். வீ.முருகதாஸ் வரவேற்றார். தா.சரஸ்வதி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com