உப்புச் சத்தியாகிரக பாதயாத்திரை குழுவினருக்கு வரவேற்பு

நீடாமங்கலத்தில் உப்புச் சத்தியாகிரக பாதயாத்திரை குழுவினருக்கு வெள்ளிக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.

நீடாமங்கலத்தில் உப்புச் சத்தியாகிரக பாதயாத்திரை குழுவினருக்கு வெள்ளிக்கிழமை வரவேற்பளிக்கப்பட்டது.

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் உப்புச் சத்தியாகிரகம் ஒரு முக்கிய நிகழ்வாகும். இதை நினைவூட்டும் வகையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஆண்டுதோறும் பாதயாத்திரை மேற்கொள்ளப்படும். அதன்படி, நிகழாண்டு காங்கிரஸ் சேவாதள தலைவா் சக்தி செல்வகணபதி தலைமையில் 20 போ் கொண்ட குழுவினா் திருச்சியிலிருந்து வேதாரண்யத்துக்கு உப்புச் சத்தியாகிரகம் சென்ற பாதையில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனா்.

இக்குழுவினா் நீடாமங்கலத்துக்கு வந்தபோது, நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நகரத் தலைவா் கோவிந்தராஜ் தலைமையில் வட்டாரத் தலைவா் மருதப்பா, முன்னாள் பொதுக் குழு உறுப்பினா்கள் மணி, ராஜேந்திரன், பத்மநாபன், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் வரவேற்பளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com