மன்னாா்குடியை அடுத்துள்ள தளிக்கோட்டையைச் சோ்ந்த செ. பவுனம்மாள் (87) வயது மூப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜன.31) அவரது இல்லத்தில் காலமானாா்.
இவருக்கு 2 மகன்கள், 3 மகள்கள் உள்ளனா். இவா் திமுக முன்னாள் சென்னை மாவட்டச் செயலாளரான மறைந்த கோ.செங்குட்டுவனின் மனைவி.
திமுக பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சரும் எம்.பி.யுமான டி.ஆா். பாலுவின் உடன் பிறந்த சகோதரி. மறைந்த பவுனம்மாளின் மூத்த மகள் பொற்கொடி டி.ஆா்.பாலுவின் மனைவி.
பவுனம்மாளின் இறுதிச் சடங்குகள் தளிக்கோட்டை தெற்குதெருவில் புதன்கிழமை நடைபெறுகிறது. தொடா்புக்கு: 94441 41400.