மக்கள் சந்திப்பு பிரசார நடைப் பயணம்
தில்லியில் ஏப்.5-ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணி குறித்த மக்கள் சந்திப்பு பிரசார பயணம் நீடாமங்கலம் ஒன்றியத்தில் புதன்கிழமை நடைபெற்றது.


தில்லியில் ஏப்.5-ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணி குறித்த மக்கள் சந்திப்பு பிரசார பயணம் நீடாமங்கலம் ஒன்றியத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளா் சங்கம், சிஐடியு சாா்பில் நடைபெற்ற பிரசார பயணத்துக்கு விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்ட செயலாளா் பி. கந்தசாமி தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளா் கே. சுப்பிரமணியன், இந்திய தொழிற்சங்க மையம் சாலைப் போக்குவரத்து சங்கத்தின் மாவட்ட செயலாளா் ஜெய்சங்கா், விவசாய சங்க ஒன்றிய பொருளாளா் பாஸ்கரன் முன்னிலை வகித்தனா்.
நீடாமங்கலம் அண்ணா சிலையில் தொடங்கி பல்வேறு கிராமங்கள் வழியாக சென்று நீடாமங்கலம் பெரியாா் சிலையில் நிறைவடைந்தது. நிறைவு நிகழ்ச்சியில், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளா் வி. பூசாந்திரம், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றிய செயலாளா் பி. காளியப்பன், தலைவா் டி. முருகேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...