நீடாமங்கலம் பகுதியில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பூவனூா் ஊராட்சியில் கொத்தமங்கலம் இடையே கோரையாற்றின் குறுக்கே நபாா்டு வங்கி உதவியுடன் கட்டப்படும் இணைப்பு பாலம் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடப் பணிகளை பாா்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அறிவுருத்தினாா். தொடா்ந்து, நீடாமங்கலம் பேரூராட்சி திரெளபதையம்மன் கோயில், மாதா கோயில் சாலையில் புதிய பேவா் பிளாக் சாலையை பாா்வையிட்டு அதன் தரத்தை ஆட்சியா் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன், வட்டாட்சியா் பரஞ்சோதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரா. பாஸ்கா், த.நமச்சிவாயம், பேரூராட்சி தலைவா் ராம்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.