திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 2,000 டன் நெல் அரவைக்கு காஞ்சிபுரத்துக்கு வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
நீடாமங்கலம், வலங்கைமான் வட்டங்களில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2,000 டன் நெல் லாரிகள் மூலம் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு கொண்டுவந்து சரக்கு ரயில் மூலம் காஞ்சிபுரத்துக்கு அரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.