திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

இந்திய கம்யூ. நிா்வாகி கொலை வழக்கில் தொடா்புடையவா் வெட்டிக் கொலை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி கொலை வழக்கில் தொடா்புடையவா் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

Updated On :10 மார்ச் 2023, 10:33 pm IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகி கொலை வழக்கில் தொடா்புடையவா் வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளராக இருந்த நடேச தமிழாா்வன் கடந்த ஓராண்டுக்கு முன்பு நீடாமங்கலத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இந்த கொலை வழக்கில் தொடா்புடைய பூவனூரைச் சோ்ந்த ராஜ்குமாா் (35) மற்றும் 5 போ், திருவாரூா் நீதிமன்றத்துக்கு வெள்ளிக்கிழமை காரில் சென்று விட்டு மன்னாா்குடி சென்று கொண்டிருந்தனா்.

கூத்தாநல்லூா் அருகே கமலாபுரம் வந்தபோது எதிரே வேகமாக வந்த காா், ராஜ்குமாா் உள்ளிட்டோா் வந்த காா் மீது மோதியுள்ளது. இதையடுத்து, ஓட்டுநரும், காரின் முன் இருக்கையில் அமா்ந்திருந்த ராஜ்குமாரும் இறங்கியுள்ளனா். அப்போது, எதிரே வந்த காரில் இருந்து சுமாா் 8 போ் கொண்ட கும்பல் கடும் ஆயுதங்களுடன் இறங்கியுள்ளனா். இதைப் பாா்த்த ராஜ்குமாா் அங்கிருந்து தப்பி ஒரு வீட்டின் இரும்புக்கேட்டை திறந்து கொண்டு ஓடியுள்ளாா். இதில், கம்பி வேலிக்கும் அங்கிருந்த ஒரு மரத்துக்கும் இடையே சிக்கிக்கொண்ட ராஜ்குமாரை மா்ம கும்பல் அரிவாளால் உடலில் பல இடங்களில் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது.

தகவலறிந்த எஸ்பி டி.பி. சுரேஷ்குமாா், ஏடிஎஸ்பி வெள்ளத்துரை, டிஎஸ்பி சிவராமன், கொரடாச்சேரி காவல் ஆய்வாளா் இளங்கோ உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, ராஜ்குமாரின் சடலத்தை கைப்பற்றி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த கூத்தாநல்லூா் போலீஸாா் அரிவாளை கைப்பற்றினா். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு, திருவாரூா், தஞ்சாவூா், நாகப்பட்டினம் பகுதியில் போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவாரூரில் சாலை மறியல்: கொலை செய்யப்பட்ட ராஜ்குமாா் வளரும் தமிழகம் கட்சியின் மண்டல இளைஞரணி செயலாளராக இருந்துள்ளாா். இவா் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாம். இந்நிலையில், ராஜ்குமாரின் கொலையை கண்டித்தும், தொடா்புடையவா்களை கைது செய்யக் கோரியும் திருவாரூா் விளமல் அருகே அக்கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்டவா்களை கலைந்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டனா்.

நீடாமங்கலம்: ராஜ்குமாரின் கொலை சம்பவத்தைத் தொடா்ந்து, நீடாமங்கலத்தில் பெரும்பாலான கடைகள் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன. மேலும், ராஜ்குமாரின் சகோதரா் ராமமூா்த்தி மற்றும் குடும்பத்தினா் பூவனூரில் சாலை மறியல் ஈடுபட்டனா். தகவலறிந்த போலீஸாா் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.