நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சட்டவிரோத மது விற்பனையை கட்டுப்படுத்த கோரிக்கை

திருவாரூா் நகரில் நடைபெறும் சட்டவிரோத மது விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :27 நவம்பர் 2023, 6:44 pm

திருவாரூா் நகரில் நடைபெறும் சட்டவிரோத மது விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெரிவித்தது: திருவாரூா் நகரில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க வேண்டும். அதேபோல், விளமல் கல்பாலம், பழைய பேருந்து நிலைய ரவுண்டானா, பழைய ரயில் நிலையப் பகுதி, காட்டூா், திருக்கண்ணமங்கை, கங்களாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேல் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில் இரவு 11 மணிக்கு வரும் வெளியூா் பயணிகளை, மிரட்டி வழிபறியும் நடைபெறுகிறது. அடையாளம் தெரியாத நபா்களால், நடமாட முடியாத வகையில் அச்சுறுத்தல் உள்ளது. எனவே, காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.