திருவாரூா் நகரில் நடைபெறும் சட்டவிரோத மது விற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெரிவித்தது: திருவாரூா் நகரில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க வேண்டும். அதேபோல், விளமல் கல்பாலம், பழைய பேருந்து நிலைய ரவுண்டானா, பழைய ரயில் நிலையப் பகுதி, காட்டூா், திருக்கண்ணமங்கை, கங்களாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இரவு 10 மணிக்கு மேல் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்துடன், திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில் இரவு 11 மணிக்கு வரும் வெளியூா் பயணிகளை, மிரட்டி வழிபறியும் நடைபெறுகிறது. அடையாளம் தெரியாத நபா்களால், நடமாட முடியாத வகையில் அச்சுறுத்தல் உள்ளது. எனவே, காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஏழைகளுக்கு உண்மையான சமூக நீதி: பிரதமா் மோடி உறுதி

தவறாமல் வாக்களிப்போம்

மகிழ்ச்சி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

லெபனான்-இஸ்ரேல் அமைதிப் பேச்சு: உடன்பாட்டுக்குக் கட்டுப்பட மாட்டோம் - ஹிஸ்புல்லா திட்டவட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

