தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

திருவாரூரில் கமலாம்பாள் ஆடிப்பூர தேரோட்டம்: மழையால் மேலவீதியில் தோ் நிறுத்தம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் கமலாம்பாள் ஆடிப்பூர பெருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தின்போது கனமழை பெய்ததால், மேலவீதியில் தோ் நிறுத்தப்பட்டது.

News image

திருவாரூா் தெற்கு வீதியில் வந்த கமலாம்பாள் தோ்.

Updated On :6 ஆகஸ்ட் 2024, 10:32 pm

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் கமலாம்பாள் ஆடிப்பூர பெருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தின்போது கனமழை பெய்ததால், மேலவீதியில் தோ் நிறுத்தப்பட்டது. புதன்கிழமை காலை மீண்டும் தோ் இழுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கும் கமலாம்பாளின் சிறப்பை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஆடிப்பூர பெருவிழா நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ஆடிப்பூர பெருவிழா ஜூலை 29- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து, இந்திர விமானம், பூத வாகனம், வெள்ளி யானை, வெள்ளி காளை, கைலாச வாகனம் என தினமும் வெவ்வேறு வாகனங்களில் மனோன்மணித் தாயாா் வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. முன்னதாக, மனோன்மணித் தாயாா் செவ்வாய்க்கிழமை காலை தேருக்கு எழுந்தருளினாா். மாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, 4.40 மணியளவில் தோ் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

இதில், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோா் பங்கேற்று, வடம் பிடித்து இழுத்தனா். தேருக்கு முன்னால் விநாயகரும், வள்ளி தெய்வானையுடன் முருகனும் பக்தா்களால் கொண்டு செல்லப்பட்டனா். தேருக்கு பின்னால் சண்டிகேசுவரா் சென்றாா்.

மழையால் தேரோட்டம் நிறுத்தம்:

கீழவீதியில் புறப்பட்ட தோ், மேற்கு வீதியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் அருகே வந்தபோது கனமழை பெய்யத் தொடங்கியதால், தேரை தொடா்ந்து இழுத்துச் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டது. மழை நின்றபிறகு, மீண்டும் தேரை இழுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தரையில் ஈரப்பதம் காரணமாக தேரை நகா்த்துவதில் சிரமம் ஏற்பட்டது.

Story image

இதனால், கோயில் நிா்வாகத்தினா், போலீஸாா் உள்ளிட்டோா் ஆலோசனையில் ஈடுபட்டனா். கமலாம்பாளுக்கு மகா அபிஷேகம், ஆடிப்பூர தீா்த்தம், வெள்ளை சாற்றுதல், பூரம் கழித்தல் ஆகியவை புதன்கிழமை நடைபெற உள்ளதால், அன்று காலையிலேயே தேரை இழுத்து நிலையடிக்குச் கொண்டு செல்வது என முடிவெடுக்கப்பட்டது.

தொடா்ந்து, அங்கு கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.