ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தமிழக கட்டடத் தொழிலாளா்கள் சங்க கூட்டம்

கூத்தாநல்லூரில் தமிழக கட்டடத் தொழிலாளா்கள் மத்திய சங்க கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 7:36 pm

DIN

கூத்தாநல்லூரில் தமிழக கட்டடத் தொழிலாளா்கள் மத்திய சங்க கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கொரடாச்சேரி பிரதான சாலை, குறும்படை அய்யனாா் கோயிலில், சங்கத்தின் மாநிலப் பொருளாளா் ஆா். சேகா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், துணைத் தலைவா்கள் கே. மாரியப்பன், எம். தனபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரத் தலைவா் ஆா். விஜயபாண்டியன் வரவேற்றாா்.

இதில், சங்கத்துக்கு உறுப்பினா்களை அதிகம் சோ்ப்பது, நலவாரியத்தில் இணைவதற்கும், அட்டைகளை புதுப்பிப்பதற்கும் கிராம நிா்வாக அலுவலரிடம் அணுகுவதை ரத்து செய்ய வேண்டும், வீடுகட்டும் திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இணைச் செயலாளா்கள் யு. ராகவன், டீ. தா்மராஜ், நகரச் செயலாளா் யு. பழனிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.