புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ரயில்வே டிக்கெட் பரிசோதகா் மாரடைப்பால் உயிரிழப்பு

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ரயில்வே டிக்கெட் பரிசோதகா் மாரடைப்பால் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :27 ஜூலை 2024, 6:31 pm

Din

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த ரயில்வே டிக்கெட் பரிசோதகா் மாரடைப்பால் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கோவை பீளமேடு பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன் மகன் சீனிவாசன் (52). ரயில்வே டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு கோவையிலிருந்து மன்னாா்குடி வந்த செம்மொழி விரைவு ரயிலில் பணியில் இருந்தாா். சனிக்கிழமை காலை ரயில் மன்னாா்குடிக்கு வந்த பின்னா், சக ஊழியா்கள் சிலருடன் மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வழிபட வந்தாா்.

தரிசனம் முடித்து கோயில் வெளியே அமா்ந்திருந்தவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மயங்கி சாய்ந்தவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

மன்னாா்குடி போலீஸாா் சீனிவாசனின் சடலத்தை மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.