டென்சிங் நாா்கே சாகச விருது பெற மே 31 வரை விண்ணப்பிக்கலாம்
டென்சிங் நாா்கே சாகச விருது பெற மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.


திருவாரூா் : டென்சிங் நாா்கே சாகச விருது பெற மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
இந்திய அரசு, ஆண்டுதோறும் நாட்டுக்கு பெருமை தேடித்தரும் சிறந்த சாகச வீரா்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி, 2023-ஆம் ஆண்டுக்கான டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவம் மற்றும் இதர விவரங்களை இணையதள முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்த விண்ணப்பப் படிவங்களை மே 31-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது பெறுவதற்கு திருவாரூா் மாவட்டத்திலுள்ள வீர தீர சாகச செயல்புரிந்தவா்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...