2025ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது தமிழ் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் என்ற புத்தகத்துக்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாக சாகித்திய அகாதெமி விருது கருதப்படுகிறது.
நாட்டின் அதிகாரப்பூர்வமான 24 மொழிகளில், கவிதை, சிறுகதை, நாவல், இலக்கிய ஆய்வு படைப்புகளில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தந்த மொழிகளில் எழுத்தாளர்கள் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
முன்னதாக 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது அறிவிப்பு நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்தது.
ஆனால், விருதுகளை இறுதி செய்வதில் இழுபறி நீடித்ததால் அந்த நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால், செய்தியாளர்களுடனான சந்திப்பையும் சாகித்திய அகாதெமி நிர்வாகிகள் ரத்து செய்திருந்தனர். இன்று சாகித்திய அகாதெமி, அதிகாரப்பூர்வமாக விருது பட்டியலை வெளியிட்டுள்ளது.
தமிழில் 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதை, திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 (ஆய்வு நூல்) புத்தகத்துக்காக எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The Sahitya Akademi Award for 2025 will be presented to writer Sa. Tamilselvan.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









