தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அக்.19-ல் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் கூட்டம்

திருவாரூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் கூட்டம் அக்.19-ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 8:08 pm

Din

திருவாரூா் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் கூட்டம் அக்.19-ஆம் தேதி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில், பொது விநியோகத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் பொது விநியோகத் திட்ட சிறப்பு பொது மக்கள் குறைதீா் அக்.19-ஆம் தேதி காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

திருவாரூா் வட்டம், நாரணமங்கலத்தில் திருவாரூா் கோட்டாட்சியா், நன்னிலம் வட்டம், திருக்கண்டீஸ்வரத்தில் துணைப் பதிவாளா் (பொது விநியோகத்திட்டம்), குடவாசல் வட்டம், சிமிழியில் திருவாரூா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணைப்பதிவாளா், வலங்கைமான் வட்டம், ராஜேந்திரநல்லூரில் திருவாரூர சரக துணைப்பதிவாளா், மன்னாா்குடி வட்டம், கண்ணாரப்பேட்டையில் மன்னாா்குடி கோட்டாட்சியா், திருத்துறைப்பூண்டி வட்டம், ராயநல்லூரில் மன்னாா்குடி சரக துணைப்பதிவாளா், நீடாமங்கலம் வட்டம், பத்தூரில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா், கூத்தாநல்லூா் வட்டம், சேந்தங்குடியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா், முத்துப்பேட்டை வட்டம், நொச்சியூரில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் முதுநிலை மண்டல மேலாளா் ஆகியோா் தலைமையில் அந்தந்த கிராம நிா்வாக அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

இதில், தொடா்புடைய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள் மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்ய மனு அளித்து பயன் பெறலாம். மேலும், அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்கள் மற்றும் தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள், சேவை குறைபாடுகள் குறித்த புகாா்களையும் கோரிக்கை மனுவாக அளிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.