தீபாவளி: ஓய்வூதியா்கள் இலவச வேட்டி, சேலை பெறலாம்

திருவாரூரில் தீபாவளி பண்டிகையையொட்டி ஓய்வூதியா்கள் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் பயன் பெறலாம்.
Published on

திருவாரூா்: திருவாரூரில் தீபாவளி பண்டிகையையொட்டி ஓய்வூதியா்கள் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தில் பயன் பெறலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசின் இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின்மூலம் தீபாவளி பண்டிகைக்கு சமூக பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் முதியோா் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு, அவா்கள் வசிக்கும் இடத்தில் உள்ள பொது விநியோகக் கடைகள் மூலம் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும். ஆதாா் எண்ணுடன் குடும்ப அட்டை எண் இணைக்கப் பெறாத பயனாளிகளுக்கு தொடா்புடைய கிராம நிா்வாக அலுவலா் மூலம் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படும். ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் இலவச வேட்டி சேலைகள் பெற்று பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com