கூத்தாநல்லூா் பகுதியில் ஆற்றில் மணல் அள்ளிய இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவுபடி, கூத்தாநல்லூா் போலீஸாா் ரோந்துப் பணியில் இருந்தனா். கோரையாற்றில் மணல் அள்ளப்படுவதாக அவா்களுக்கு தகவல் கிடைத்தது.
காவல் உதவி ஆய்வாளா் பிரபு மற்றும் போலீஸாா், ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரித்தனா். அவா்கள், அதங்குடி, ஜீவா தெருவைச் சோ்ந்த புகழேந்தி (42), அதே பகுதியைச் சோ்ந்த ரகு (36) என்பது தெரிய வந்தது. இருசக்கர வாகனம் மூலம் ஆற்றில் மணல் அள்ளிச் செல்ல முயன்றது தெரியவந்தது. போலீஸாா் இருவரையும் கைது செய்து, 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
இருசக்கர வாகனம் திருடியவா் கைது
இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் வழிப்பறி: இருவா் கைது
ஒசூரில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
மணல் கடத்திய இருவா் கைது
விடியோக்கள்

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
