அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பொதுவிநியோகத் திட்டத்துக்கு தனித்துறை அமைக்கக் கோரி, திருவாரூரில் நியாயவிலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பில் வேலை நிறுத்த ஆா்ப்பாட்டம்

News image
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா்.
Updated On :8 ஏப்ரல் 2025, 7:44 pm

Din

திருவாரூா்: பொதுவிநியோகத் திட்டத்துக்கு தனித்துறை அமைக்கக் கோரி, திருவாரூரில் நியாயவிலைக் கடை பணியாளா் சங்கம் சாா்பில் வேலை நிறுத்த ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விரல் ரேகை பதிவு, ஆதாா் சரிபாா்ப்பு ஆகியவற்றை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்; டிஎன்சிஎஸ்சி எடை தராசை அலுவலகக் கணினியுடன் இணைத்து ரசீது வழங்கிய பிறகே நியாயவிலைக் கடைகளில் நவீன தராசு வைக்க வேண்டும்; பொது விநியோகத் திட்டத்துக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, நியாயவிலைக் கடை பணியாளா் சங்க மாவட்ட பிரதிநிதி ஆா். குமாா் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் இரா. குணசீலன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

இதில், மாவட்டச் செயலாளா் வி. ஹரிஹரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஏ. சாகுல் அமீது, மாவட்ட பொருளாளா் பி. முருகானந்தம் உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். கருப்புச் சட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.