விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

நியாயவிலைக் கடை பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 1:19 am

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில், திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட தலைவா் செல்லத்துரைபாண்டியன் தலைமை வகித்தாா். செயலா் ரவிக்குமாா், பொருளாளா் அலெக்ஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக தென்காசி மாவட்டத் தலைவா் முருகன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

பொது விநியோக திட்டத்திற்கு தனித்துறையை உருவாக்க வேண்டும். ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருள்களை பொட்டலமாக வழங்க வேண்டும். அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் எடையாளா் பணி நியமனம் செய்ய வேண்டும். அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும். மகளிா் நியாயவிலைக் கடைகளை அரசு நடத்தி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.