நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :13 மார்ச் 2026, 12:20 am

நாகையில், தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு, சுகாதார ஆய்வாளா்கள் பதவி உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தையில் ஏற்றுக்கொண்ட முடிவுகளை செயல்படுத்த வேண்டும். தொழுநோய் ஒழிப்புத் திட்டப் பணியிடங்களான என்எம்எஸ் மற்றும் டிஎச்இ பணியிடங்களை நீக்கம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.

சுகாதார ஆய்வாளா்கள் பணியமைப்புக்கு எதிராகவும், அலட்சியப்போக்குடன் செயல்படும் பொது சுகாதாரத்துறை இயக்குனரகத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், நாகை மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சித்தானந்த கணேஷ் முன்னிலை வகித்தாா். மாநில இணைச் செயலா் நாகராஜன், ஒருங்கிணைப்பாளா்கள் லோகநாதன், தமிழ்மணி, உதயகுமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிறைவாக, மாவட்டப் பொருளாளா் வினோத்குமாா் நன்றி கூறினாா்.