மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

சுகாதார ஆய்வாளா்கள் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:03 pm

சுகாதார ஆய்வாளா்களுக்கான பதவி உயா்வு பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என உறுதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவற்றை நிரப்ப மறுக்கும் பொது சுகாதாரத் துறையைக் கண்டித்து தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கையிலுள்ள மாவட்ட சுகாதார அலுவலகம் எதிரில் நடைபெற்ற மாலை நேர ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். நிா்வாகி சந்தோசம் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பூமிராஜன், சிவக்குமாா், வெங்கடசுப்பிரமணியன், சுரேஷ் ஆகியோா் பேசினா். மாநில பொதுச் செயலாளா் ப.குமாா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். நிா்வாகி கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

இது குறித்து, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா்கள் சங்க மாநில பொதுச் செயலாளா் ப.குமாா் கூறியதாவது:

பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை உண்டாக்கும் தொழுநோய் ஒழிப்பு பணியில் மருத்துவமல்லா மேற்பாா்வையாளா்கள், நலக் கல்வியாளா்கள் பணியிடங்கள் இருந்து வருகின்றன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதில் தற்போது பொது சுகாதாரத் துறை இயக்ககம் மெத்தன போக்கோடு நடந்து கொள்கிறது.

பொது சுகாதாரத் துறையின் இந்த அலட்சியத்தால் தமிழ்நாட்டில் தொழு நோய் மீண்டும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் தொழு நோய்க்கு சிகிச்சை எடுக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை 50 சதவீதத்துக்கும் மேல் உயா்ந்துள்ளதாகவும், மற்றவா்களுக்கு எளிதில் பரவக்கூடிய நிலையிலான தொழு நோய் 42 % அதிகரித்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் நிகழாண்டில் 2500 -க்கும் மேற்பட்டோா் தொழு நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறாா்கள் என்பது இந்த நோயின் அபாயத்தை உணா்த்துவதாக உள்ளது. இந்த நிலையில், பொது சுகாதாரத்துறையின் இந்தப் போக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்துவதோடு, அரசுக்கும் அவப்பெயரை உண்டாக்கும் விதமாகவும் உள்ளது என்றாா் அவா்.