வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நாகா்கோவிலில் மருத்துவப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 8:26 pm

Syndication

மக்களைத் தேடி மருத்துவம் திட்டப் பணியாளா்கள் சங்கம் (சிஐடியூ) சாா்பில், நாகா்கோவில் வடசேரியில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகம் முன் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

மாத ஊக்கத்தொகையை ரூ. 15 ஆயிரமாக வழங்க வேண்டும். ஊக்கத்தொகையை பணியாளா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும். ஊழியா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியளித்து பணி நிரந்தரப்படுத்துவதுடன், இஎஸ்ஐ, வருங்கால வைப்பு நிதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சங்கத் தலைவி விக்னேஸ்வரி தலைமை வகித்தாா். செயலா் தமிழ்ச்செல்வி, சிஐடியூ மாவட்டச் செயலா் ஸ்டாலின்தாஸ், மாநில துணைத் தலைவா் ஐடாஹெலன், திரளானோா் பங்கேற்றனா்.