மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து நாகா்கோவிலில் பிரதமா் மோடியின் சாலைப் பேரணி புதன்கிழமை (ஏப். 15) நடைபெறுகிறது.

News image

பிரதமா் மோடி! - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 2:01 am IST

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து நாகா்கோவிலில் பிரதமா் மோடியின் சாலைப் பேரணி புதன்கிழமை (ஏப். 15) நடைபெறுகிறது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகிறாா். தில்லியிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு வரும் பிரதமா், அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் மாலை 4 மணிக்கு நாகா்கோவில் ஆயுதப்படை மைதானத்துக்கு வருகிறாா். அங்கிருந்து, நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்புக்கு காரில் வரும் பிரதமா், வேப்பமூடு சந்திப்பிலிருந்து வடசேரி எம்.ஜி.ஆா். சிலை வரை ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு சாலைப் பேரணியாகச் சென்று கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டுகிறாா்.

இப் பேரணியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் அண்ணாமலை உள்பட பலா் கலந்து கொள்கின்றனா்.

பிரதமா் வருகையையொட்டி திருவனந்தபுரம் விமான நிலையம் முதல் நாகா்கோவில் ஆயுதப்படை மைதானம் வரை ஹெலிகாப்டா் ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் தலைமையில் நாகா்கோவில் நகரம் முழுவதும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள், கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.