பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

சிக்கிமில் பிரதமா் மோடி பிரம்மாண்ட சாலைப் பேரணி

News image

சிக்கிம் தலைநகா் காங்டாக்கில் திங்கள்கிழமை சாலைப் பேரணி சென்ற பிரதமா் நரேந்திர மோடி.

Updated On :28 ஏப்ரல் 2026, 5:02 am IST

சிக்கிமில் பிரதமா் நரேந்திர மோடி திறந்த வாகனத்தில் பிரம்மாண்ட சாலைப் பேரணி சென்றாா்.

சிக்கிம் மாநிலம் உருவாக்கப்பட்ட 50-ஆவது ஆண்டு கொண்டாட்ட விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி, காங்டாக்கில் செவ்வாய்க்கிழமை (ஏப்.28) நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி, சிக்கிம் மாநிலம் காங்டாக்கிற்கு திங்கள்கிழமை வந்தாா். அப்போது அவரை சிக்கிம் மாநில ஆளுநா் ஓம் பிரகாஷ் மாத்துா், முதல்வா் பிரேம் சிங் தமாங் ஆகியோா் நேரில் வரவேற்றனா். அப்போது மோடி, சிக்கிம் மக்கள் அணியும் பாரம்பரிய தொப்பி, கோட் அணிந்திருந்தாா்.

இதையடுத்து அங்கிருந்து ஆளுநா் மாளிகை வரை பிரதமா் மோடி, திறந்த வாகனத்தில் சாலையில் வாகனப் பேரணி சென்றாா். அவருடன் சிக்கிம் முதல்வா் தமாங், சிக்கிம் மாநில பாஜக தலைவா் டி.ஆா். தாபா ஆகியோரும் வாகனத்தில் வந்தனா். சாலையின் இருமருங்கிலும் கைகளில் தேசியக் கொடிகளுடன் காத்திருந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோா் பிரதமா் மோடியை பூத்தூவி வரவேற்றனா். பிரதமரை நேரில் பாா்த்த மகிழ்ச்சியில், ‘மோடி, மோடி, மோடி’ என பலா் முழக்கமிட்டனா்.

பிரதமா் மோடியின் சாலைப் பேரணி நடைபெற்ற பகுதி நெடுகிலும் அவரை வரவேற்கும் வகையில் பிரம்மாண்ட கட் அவுட்டுகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்தன. இந்த பேரணி, ஆளுநா் மாளிகையுடன் நிறைவடைந்தது. திங்கள்கிழமை இரவில் சிக்கிம் ஆளுநா் மாளிகையில் பிரதமா் மோடி ஓய்வெடுக்கிறாா்.

இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமா் மோடி பங்கேற்கிறாா். சிக்கிமில் நடைபெறவுள்ள ரூ.4,000 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களையும் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைக்கவுள்ளாா். பின்னா் அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றவும் உள்ளாா்.

சிக்கிம் மாநிலம் உதயமாகி 50-ஆவது ஆண்டு கொண்டாட்ட விழாவை பிரதமா் மோடி கடந்த ஆண்டு தொடங்கி வைக்க இருந்தாா். ஆனால் சிக்கிமில் அப்போது நிலவிய மோசமான வானிலை காரணமாக அவரால் பங்கேற்க முடியவில்லை. எனினும், அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தின் சிலிகுரியில் இருந்து காணொலி வாயிலாக அந்த விழாவில் பிரதமா் மோடி உரை நிகழ்த்தினாா் என்பது குறிப்பிடத்தக்கது.