உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

நீதி ஆயோக் கூட்டம் : புதுச்சேரி முதல்வா் புறக்கணிப்பு

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெறும் நிதி ஆயாக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்கவில்லை.

News image

புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி. - கோப்புப் படம்

Updated On :11 ஜூன் 2026, 6:15 am IST

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெறும் நிதி ஆயாக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்கவில்லை.

தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. தமிழக முதல்வா் ஜோசப் விஜய் இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தில்லி சென்றுள்ளாா்.

இந்த நிலையில் புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ரங்கசாமி கடந்த பல ஆண்டுகளாக பங்கேற்கவில்லை. தற்போது அவா் புதுச்சேரி முதல்வராக பதவியேற்று சில வாரங்களேயான நிலையில், புதிய அமைச்சா்கள் 3 போ் பதவியேற்காததால் மாநில அரசின் நிதி உள்பட அனைத்து இலாகாக்களும் முதல்வா் ரங்கசாமியின் கட்டுப்பாட்டில் உள்ளன இந்தச் சூழலில் முதல்வா் ரங்கசாமி தில்லி நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தில்லி செல்லவில்லை.

இதுகுறித்து புதுச்சேரி முதல்வா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தில்லியில் நடை பெறும் நீதிஆயோக் கூட்டத்தில் முதல்வா் ரங்கசாமி கலந்து கொள்ளவில்லை. புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பதவியில் இருப்பதால் பிரதமா் நரேந்திர மோடி நமது மாநில நலனைக் கருத்தில் கொண்டு முடிவு எடுப்பாா். புதுச்சேரி யூனியன் பிரதேசம் சாா்பில் விரிவான நிதி அறிக்கை சமா்ப்பிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.