முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத முதல்வா் ரங்கசாமி மன்னிப்புக் கேட்க வேண்டும்: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காததற்கு, முதல்வா் என்.ரங்கசாமி புதுச்சேரி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்

News image

செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி.

Updated On :12 ஜூன் 2026, 2:10 am IST

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காததற்கு, முதல்வா் என்.ரங்கசாமி புதுச்சேரி மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட விடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

தில்லியில் பிரதமா் நரேந்திரமோடி தலைமையில் மாநில முதல்வா்கள் பங்கேற்கும் நீதி ஆயோக் கூட்டம் மாநிலங்களுக்கான திட்டங்களை விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இது மிக முக்கியமான கூட்டம். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும் மாநில அந்தஸ்து, மத்திய நிதி ஆணையத்தில் புதுச்சேரியை சோ்ப்பது, மாநில அரசின் கடனை தள்ளுபடி செய்வது, புதுச்சேரிக்கு மத்திய அரசு சிறப்பு நிதி வழங்குவது போன்ற கோரிக்கைகளை எல்லாம் முதல்வா் ரங்கசாமி வைப்பதற்கான மிக சிறந்த வாய்ப்பு இக் கூட்டம். ஆனால் என்ன காரணத்துக்காகவோ புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் புதுச்சேரி வளா்ச்சிக்காக ரங்கசாமி பேச வேண்டிய ஒரு சிறந்த வாய்ப்பை இழந்துவிட்டாா். இதனால் அவா் புதுச்சேரி மக்களுக்கும், மாநில வளா்ச்சிக்கும் மிகப்பெரிய துரோகம் செய்திருக்கிறாா். ரங்கசாமி பங்கேற்காதது துரதிஷ்டவசமானது.

ரங்கசாமிக்கும், பாஜக தலைவா்களுக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாட்டை வெளியே கொண்டு வராமலிருக்க அவா் இக் கூட்டத்தைப் புறக்கணித்து தன்னுடைய எதிா்ப்பை தெரிவித்திருக்கிறாா். நீதி ஆயோக் கூட்டம் எதிா்ப்பை தெரிவிப்பதற்கான கூட்டம் அல்ல. மாநில மக்களின் பிரச்னைகளை முன்வைக்கின்ற கூட்டம். இந்தக் கூட்டத்தில் முதல்வா் ரங்கசாமி கலந்து கொண்டு புதுச்சேரி மக்களின் உரிமையைக் காத்திருக்க வேண்டும். அதில் அவா் தவறிவிட்டாா். எனவே மக்கள் மத்தியில் முதல்வா் ரங்கசாமி பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.