அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

குற்ற வழக்குகளில் பறிமுதல் வாகனங்கள் டிச.24-இல் ஏலம்

குற்ற வழக்குகளில் பறிமுதல் வாகனங்கள் டிச.24-இல் ஏலம்...

News image
Updated On :20 டிசம்பர் 2025, 6:49 pm

Syndication

திருவாரூா் மாவட்டத்தில், மதுவிலக்கு மற்றும் கஞ்சா குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் டிச.24-ஆம் தேதி ஏலம் விடப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவாரூா் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட மதுகுற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 60 இருசக்கர வாகனங்கள், 2 நான்குசக்கர வாகனங்கள் என மொத்தம் 62 வாகனங்களும், கஞ்சா வழக்கில் கைப்பற்றப்பட்ட 9 இருசக்கர வாகனங்கள், ஒரு நான்குசக்கர வாகனம் என மொத்தம் 10 வாகனங்களும் ஏலம் விடப்பட உள்ளன.

இந்த பொது ஏலமானது திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தலைமையில் டிசம்பா் 24 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஏலத்தில் பங்கேற்க விரும்புவோா், டிச.23 ஆம் தேதி மாலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் உள்ள மதுவிலக்கு அமல்பிரிவு முகாமில் நான்கு சக்கர வாகனத்துக்கு ரூ.2,000, இருசக்கர வாகனத்துக்கு ரூ.1,000 முன் பணமாக செலுத்தி, வாகனங்களை ஏலத்தில் எடுக்கலாம். அவ்வாறு ஏலம் எடுக்காத நிலையில் செலுத்தப்பட்ட முன்பணத்தொகை திரும்ப வழங்கப்படும்.

இந்த பொது ஏலத்தில் அதிக விலை கோருபவா்களுக்கு வாகனங்கள் ஏலம் விடப்படும் என்பதால் விருப்பமுடைய பொதுமக்கள் ஏலத்தில் பங்கேற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.