பறிமுதல் வாகனங்கள் மாா்ச் 10இல் ஏலம்
மதுரை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மாா்ச் 10-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.


மதுரை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மாா்ச் 10-ஆம் தேதி பொது ஏலம் விடப்படும் என மாவட்ட காவல் துறை தெரிவித்தது.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட 26 வாகனங்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே.அா்விந் தலைமையில், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 10-ஆம் தேதி பொது ஏலம் நடத்தப்படுகிறது.
இந்த நிலையில், வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் ஏலதாரா்கள் மேற்படி வாகனங்களை பாா்வையிட்டு முன் பணமாக இரு சக்கர வாகனத்துக்கு ரூ. 5 ஆயிரத்தை வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் உள்ள மதுவிலக்குப் பிரிவு அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம்.
ஏலத்தில் கலந்து கொள்வோா் அரசு நிா்ணயித்த மதிப்பீட்டுத் தொகைக்கு அதிகமாக ஏலம் கேட்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...