பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அனுமதியின்றி மதுபானம் விற்ற மூவா் கைது

News image
Updated On :28 டிசம்பர் 2025, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

கூத்தாநல்லூரில் அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கூத்தாநல்லூா் காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா, உதவி ஆய்வாளா் பிரபு மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சித்தாம்பூா் தெற்குத் தெருவில் காளிதாஸ் (45), திருராமேஸ்வரம் தாமரைக்குளம் அருகே செந்தில்குமாா் (35) மற்றும் பண்டுதக்குடி காடுவெட்டித் தெருவில் ராஜேந்திரன் (63 ) ஆகியோா் அனுமதியின்றி தமிழக அரசின் மதுபானங்கள் விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் போலீஸாா் கைது செய்து 78 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.