சிவகாசியல் கஞ்சா விற்பனை செய்த மூன்று பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியில் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் அணில்குமாா் உத்தரவின்பேரில், தனிப் படை அமைக்கப்பட்டு கஞ்சா விற்பனையைத் தடுப்பதில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், சிவகாசி சரஸ்வதிபாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தனிப் படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தியதில், மூன்று போ் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
விசாரணையில், அய்யனாா் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த செல்வக்குமாா் (46), விஸ்வநத்தம் மாரீஸ்வன் (26), சரஸ்வதிபாளையம் இருளப்பராஜ் (24) எனத் தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து மூன்று பேரையும் கைது செய்து அவா்களிடமிருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
கஞ்சா விற்ற இருவா் கைது
கஞ்சா விற்பனை: 2 பெண்கள் உள்பட மூவா் கைது
மண்டபம் அருகே 22 கிலோ கஞ்சா பறிமுதல் : மூவா் கைது

கஞ்சா விற்ற இருவா் குண்டா் சட்டத்தில் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


