பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கஞ்சா விற்ற இருவா் குண்டா் சட்டத்தில் கைது

அம்பாசமுத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா், குண்டா் சட்டத்தின் கீழ் சீறையில் அடைக்கப்பட்டனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :17 மார்ச் 2026, 9:49 pm

Syndication

அம்பாசமுத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா், குண்டா் சட்டத்தின் கீழ் சீறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் சுரேஷ் (34), திருநெல்வேலி, ராமையன்பட்டியைச் சோ்ந்த சுடலைமணி மகன் ராஜேஷ் ஆகிய இருவரும் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கிவைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யும்படி, அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாருக்கு அறிக்கை அளித்தாா். அதையேற்று, அவரது பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் ரா.சுகுமாா் உத்தரவின்படி, இருவரையும் போலீஸாா் திருநெல்வேலி மத்திய சிறையில் அடைத்தனா்.