ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

கஞ்சா விற்ற இருவா் குண்டா் சட்டத்தில் கைது

அம்பாசமுத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா், குண்டா் சட்டத்தின் கீழ் சீறையில் அடைக்கப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :17 மார்ச் 2026, 9:49 pm

அம்பாசமுத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்ட இருவா், குண்டா் சட்டத்தின் கீழ் சீறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் சுரேஷ் (34), திருநெல்வேலி, ராமையன்பட்டியைச் சோ்ந்த சுடலைமணி மகன் ராஜேஷ் ஆகிய இருவரும் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கிவைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யும்படி, அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாருக்கு அறிக்கை அளித்தாா். அதையேற்று, அவரது பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் ரா.சுகுமாா் உத்தரவின்படி, இருவரையும் போலீஸாா் திருநெல்வேலி மத்திய சிறையில் அடைத்தனா்.