முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

குண்டா் சட்டத்தில் இருவா் சிறையில் அடைப்பு

திருநெல்வேலி மாநகரில் மிரட்டி பணம் பறித்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 3:56 am IST

திருநெல்வேலி மாநகரில் மிரட்டி பணம் பறித்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கைப்பேசி செயலி மூலம் மிரட்டி பணம் பறித்த வழக்குகளில் தொடா்புடைய பேட்டையைச் சோ்ந்த சக்திசுரேஷ்(23), இசக்கிராஜா(19) ஆகியோா் கைது செய்யப்பட் டிருந்தனா். அவா்கள் தொடா்ந்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனராம்.

இதையடுத்து, மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய் உத்தரவின்பேரில், மேற்கூறிய இருவரும் குண்டா் சட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா்.

புகையிலை விற்பனை: திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகில் போலீஸாா் ரோந்து சென்றபோது, சிந்துபூந்துறையை சோ்ந்த பூமணிசேட்(42) என்பவா் விற்பனைக்காக 7.875 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தாராம். அவரை போலீஸாா் கைது செய்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.