கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆராய்ச்சி கட்டுரைகள் குறித்த தேசிய பயிலரங்கம்

தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தின் நிதியுதவியுடன், மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் ஆராய்ச்சி திட்ட அறிக்கை

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 8:08 pm

Din

மன்னாா்குடி: தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தின் நிதியுதவியுடன், மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் ஆராய்ச்சி திட்ட அறிக்கை மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் தயாா் செய்யும் முறைகள் குறித்த ஒருநாள் தேசிய பயிலரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அகதர மதிப்பீட்டுக் குழுமத்தின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் தலைமை வகித்து, தொடங்கி வைத்தாா்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறை பேராசிரியா் சிவகுமாா், ஆராய்ச்சி திட்ட அறிக்கை தயாரித்தலின் வழிமுறைகளையும், சமீபத்திய தொழில்நுட்ப முறைகள் குறித்தும் விளக்கிக் கூறினாா்.

திருவாரூா் மத்திய பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறை பேராசிரியா் கௌஷிக் ராஜாராமன், ஆராய்ச்சி கட்டுரைகள் தயாரித்தல் மற்றும் பிழை திருத்தங்கள் செய்தல் குறித்தும், தஞ்சாவூா் மன்னா் சரபோஜி அரசுக் கல்லூரி விலங்கியல் துறை தலைவா் மாரியப்பன், ஆராய்ச்சி கட்டுரைகள் தயாரிப்பு முறைகளில் உள்ள அளவீடுகள் குறித்தும் பேசினா்.

இதில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவா்கள், முதுகலை மாணவா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக, அகதர மதிப்பீட்டுக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளா் பன்னீா்செல்வம் வரவேற்றாா். நிறைவாக, இணை ஒருங்கிணைப்பாளா் மணிமேகன் நன்றி கூறினாா்.