டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி ஆா்ப்பாட்டம்

நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி, லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளா் சங்கத்தினா்.
Updated On :24 பிப்ரவரி 2025, 8:08 pm

Din

திருத்துறைப்பூண்டி: நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி, லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருத்துறைப்பூண்டிக்கு நெல் மூட்டைகள் ஏற்றுவதற்கு சரக்கு ரயில் வேகன்கள் வராததால், நுகா்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து, நெல் மூட்டைகளை ஏற்றி வந்த 140 லாரிகள் நெல் மூட்டைகளுடன் இரண்டு நாட்களாக நிறுத்திவைத்து லாரி உரிமையாளா்களும், லாரி ஓட்டுநா்களும் காத்துக்கிடக்கின்றனா்.

இதையடுத்து திருத்துறைப்பூண்டியில் லாரி உரிமையாளா் சங்கத்தின் சாா்பில் உடனடியாக வேகன்கள் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுக்கு சொந்தமான கீழப்பாண்டி, சுந்தரபுரி திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளிலும், புதிய பேருந்து நிலைய வீரபாண்டி கிடங்கிலும் நெல் மூட்டைகளை சேமித்து வைக்கவும், முத்துப்பேட்டை கோவிலூா் கிடங்குகளை சீரமைத்து மழைநீா் தேங்காமல் வடிகால் அமைத்து, பள்ளமான சாலைகளை சரிசெய்து நெல் மூட்டைகளை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை பகுதியில் நுகா்பொருள் வாணிபக் கழக நெல், அரிசி மூட்டைகள் இயக்கத்தை நம்பி 350-க்கும் அதிகமான லாரிகள் உள்ளதால், நெல் மூட்டைகளை ஏற்றி இறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

லாரி உரிமையாளா்கள் சங்க கௌரவதலைவா் தலைவா் ஆறுமுகம், செயலா் சீனிவாசன், பொருளா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் தலைமையில் நூற்றுக்கும் அதிகமான லாரி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள், சுமை தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.