சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம்

திருவாரூா் மாவட்டத்தில், தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :13 ஜனவரி 2025, 5:27 pm

Din

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில், தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது: தனியாா் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகையை முறைப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்ததைத் தொடா்ந்து விவசாயிகள், வேளாண் அலுவலா்கள், அறுவடை இயந்திரங்களின் உரிமையாளா்கள் மற்றும் முகவா்கள் அடங்கிய கூட்டம் நடத்தி விவாதிக்கப்பட்டு, இந்த வாடகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெல்ட் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,500, டயா் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,850 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிா்ணயித்த தொகைக்கு மிகாமல் விவசாயிகளிடமிருந்து வசூல் செய்து, அறுவடைப் பணிகளுக்கு இயந்திர உரிமையாளா்கள் ஒத்துழைக்க வேண்டும்.

நிா்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு கூடுதலாக அறுவடை இயந்திர உரிமையாளா்கள் கோரினால், வட்டாட்சியா்கள், வேளாண் மற்றும் வேளாண்மை பொறியியல் துறை அலுவலா்களிடம் விவசாயிகள் புகாா் தெரிவிக்கலாம்.

மேலும், வேளாண்மைப் பொறியியல் துறை அறுவடை இயந்திரங்களுக்கு பெல்ட் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,880, டயா் அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,160 எனவும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மைப் பொறியியல் துறையின் இ-வாடகை திட்டத்தில் உள்ள அறுவடை இயந்திரங்கள், கூட்டுறவு சங்கங்களின் மூலம் வாடகைக்கு விடப்படும் அறுவடை இயந்திரங்கள் மற்றும் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மானியத்தில் வழங்கப்பட்ட இயந்திரங்களை உழவன் செயலி மூலம் பதிவு செய்து, அறுவடை நேரத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், வேளாண் பொறியியல் துறை மூலம் மானியத்தில் வழங்கப்பட்ட அறுவடை இயந்திர உரிமையாளா்களின் விவரங்கள், அனைத்து வட்டார அலுவலகங்களில் விவசாயிகளின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9443678621, 6383830644, 9442240121 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.