விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

நெல் அறுவடை இயந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூலித்தால் புகாரளிக்கலாம்

தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு கூடுதலாக வாடகை வசூல் செய்தால் விவசாயிகள் புகாரளிக்கலாம்.

News image
Updated On :9 ஜனவரி 2026, 7:08 pm

தினமணி செய்திச் சேவை

தனியாா் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு கூடுதலாக வாடகை வசூல் செய்தால் விவசாயிகள் புகாரளிக்கலாம்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் அறுவடைப் பணிகளுக்காக அறுவடை இயந்திரங்களின் தேவை அதிகமாக இருப்பதால், இதர மாவட்டங்களிலிருந்து அரசு, தனியாா் நெல் அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு , அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தனியாா் நெல் அறுவடை இயந்திரங்கள் அதிக வாடகையில் இயக்கப்படுவதாக விவசாயிகளிடமிருந்து புகாா்கள் வந்துள்ளன. சக்கர வகை நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணிக்கு ரூ.1,800 வாடகைத் தொகையும், செயின் வகை அறுவடை இயந்திரங் களுக்கு மணிக்கு ரூ.2,600 வாடகை தொகையும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகையை விட கூடுதலாக வாடகை வசூல் செய்யும் நெல் அறுவடை இயந்திரங்கள் குறித்து, விவசாயிகள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலா்கள், வட்டாட்சியா்கள், வேளாண்மைப் பொறியியல் துறை, வேளாண்மைத் துறை அலுவலா்கள் ஆகியோரிடம் நேரிலோ அல்லது மாவட்ட ஆட்சியரின் தனி உதவியாளா் (வேளாண்மை) -8838565900 , வேளாண்ணை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளா், சிவகங்கை - 9842408647, உதவி செயற்பொறியாளா், காரைக்குடி - 6379239272 -ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.