கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் சக்தி ஹோம வழிபாடு, பால் அபிஷேகம்

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் ஐந்தாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவையொட்டி சக்தி ஹோம வழிபாடு

News image
வெள்ளி அன்ன வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளி மகாமாரியம்மன்.
Updated On :20 ஜனவரி 2025, 8:03 pm

Din

நீடாமங்கலம்: வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் ஐந்தாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழாவையொட்டி சக்தி ஹோம வழிபாடு, 1,008 லிட்டா் பால் அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வலங்கைமான் பேரூராட்சிக்குட்பட்ட வரதராஜம்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை பாடை காவடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு பால் காவடி, பாடை காவடி, அலகு காவடி, தொட்டில் காவடி உள்ளிட்டவை எடுத்து நோ்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

இக்கோயில் மகா கும்பாபிஷேகம் கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்று ஐந்தாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை கணபதி பூஜையும் தொடா்ந்து கோயிலில் சக்தி ஹோம வழிபாடு நடைபெற்றது.

பின்னா் விநாயகா் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆகியவற்றுக்கு 1,008 லிட்டா் பால் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. அனைத்து சந்நிதிகளிலும் மகா தீபாராதனை கட்டப்பட்டது. மாலை வெள்ளி அன்ன வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கிருஷ்ணகுமாா், தக்காா் மும்மூா்த்தி மற்றும் உபய தாரா்கள் ஆலய பணியாளா்கள் செய்திருந்தனா்.