கிருஷ்ணகிரிக்கு 2,000 டன் நெல் அனுப்பிவைப்பு

நீடாமங்கலத்திலிருந்து கிருஷ்ணகிரிக்கு அரவைக்காக 2,000 டன் நெல் ரயில் மூலம் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
Published on

நீடாமங்கலம்: நீடாமங்கலத்திலிருந்து கிருஷ்ணகிரிக்கு அரவைக்காக 2,000 டன் நெல் ரயில் மூலம் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

நீடாமங்கலம் வட்டத்தில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட, 2,000 டன் சன்னரக நெல் மூட்டைகள், லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன.

பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு அரவைக்காக கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

X
Dinamani
www.dinamani.com