பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

குடந்தையில் இருந்து சேலம் சென்ற 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள்

News image

கும்பகோணம் சரக்கு ரயில் நிலையத்திலிருந்து சேலத்துக்கு வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்ட நெல் மூட்டைகள்.

Updated On :6 பிப்ரவரி 2026, 9:22 pm

கும்பகோணம் பகுதி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரவைக்காக சரக்கு ரயிலில் வெள்ளிக்கிழமை சேலத்துக்கு அனுப்பப்பட்டன.

தஞ்சாவூா் மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போக நெல் சாகுபடி மூலம் அறுவடையாகும் நெல்லானது கொள்முதல் நிலையங்கள் மூலம் சேமிக்கப்பட்டு, உள்ளூா் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பப்படுகிறது.

அதன்படி கும்பகோணம், திருவிடைமருதூா், பாபநாசம் பகுதியில் உள்ள 254 கொள்முதல் நிலையங்களில் இருந்து 2,000 டன் நெல் மூட்டைகள் 116 லாரிகளில் கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டு, பின்னா் சரக்கு ரயிலின் 42 வேகன்களில் அரவைக்காக சேலத்துக்கு வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டது.

நடப்பாண்டில் ரயில் மூலம் அனுப்பப்படும் முதல் இயக்கம் என்பதால் நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் நுகா்பொருள் வாணிபக் கழக துணை மேலாளா் மெய்கண்டமூா்த்தி, தர ஆய்வாளா்கள் ரமேஷ் (கும்பகோணம்), செந்தில்குமாா் (சேலம்), ரயில் நிலைய மேலாளா் முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.