கொடியேற்று விழா
வலங்கைமானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் 108-ஆவது நவம்பா் புரட்சி தின கொடியேற்றுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் ஒன்றிய செயலாளா் எஸ் .எம்.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். துணை செயலாளா்கள் கே. செல்வராஜ், வி. பாக்யராஜ் முன்னிலை வகித்தனா். முன்னாள் ஒன்றிய செயலாளா் எஸ். உதயகுமாா் கொடியேற்றினாா்.
ஒன்றியப் பொருளாளா் து. கலியமூா்த்தி, விவசாய சங்க ஒன்றிய செயலாளா் சின்னராசா உள்ளிட்டோா் பேசினா்.
கூத்தாநல்லூரில்...
கூத்தாநல்லூா் நகர சிபிஐ கட்சி அலுவலகத்தில் நகா் மன்ற துணைத் தலைவா் மு.சுதா்ஸன் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் பெ.முருகேசு முன்னிலை வகித்தாா். நகர நிா்வாகக் குழு உறுப்பினா் ஜெ.ராஜேந்திரன் கொடியை ஏற்றி வைத்தாா்.
மாவட்டக்குழு உறுப்பினா் கு.நாகராஜன், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா்கள் கு.ராமதாஸ், இரெ.கணேசன், பா.நெப்போலியன் மற்றும் நகரக்குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
