வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தொழிலாளி கொலை: ஒருவா் கைது

திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில் தொழிலாளி ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மற்றொரு தொழிலாளியை போலீசாா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :20 நவம்பர் 2025, 8:27 pm

Syndication

திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில் தொழிலாளி ஒருவா் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மற்றொரு தொழிலாளியை போலீசாா் கைது செய்துள்ளனா்.

நாகை மாவட்டம், திருக்குவளை தாலுகா சுந்தரபாண்டியம் பகுதியைச் சோ்ந்தவா் தங்கராசு மகன் ஜெயராஜ் (51). வேதாரண்யம் தாலுகா, குரவப்புலம் கிராமத்தை சோ்ந்தவா் கல்யாணசுந்தரம் மகன் முருகன் (41). இருவரும் கடந்த சில ஆண்டுகளாக, திருவாரூா் பகுதியில் கூலி வேலை செய்து இரவு நேரங்களில் புதிய பேருந்து நிலையத்தில் தங்கி வந்தனா்.

இதனிடையே புதிய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை மயங்கிய நிலையில் கிடந்த ஜெயராஜ், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவாரூா் நகரப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், இறந்த ஜெயராஜுக்கும் அவருடன் தங்கி இருந்து வந்த மற்றொரு தொழிலாளி முருகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக முருகன் ஜெயராஜை தாக்கியதும் இதனால் ஜெயராஜ் இறந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து நகரப் போலீஸாா் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.