தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

மன்னாா்குடி கோயிலில் இன்று பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையடுத்து

News image
Updated On :25 நவம்பர் 2025, 9:08 pm

Syndication

மன்னாா்குடி: மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையடுத்து புதன்கிழமை (நவ.26) பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இக்கோயிலில் 2010-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, கோயில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு எடுத்து அதற்காக தமிழக அரசு ரூ. 2.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்த நிலையில், 2024-ஆம் ஆண்டு ஜூலை மாதம் கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டு ராஜகோபுரம் உள்ளிட்ட நான்கு கோபுரங்கள் மற்றும் கோயில் வளாகம் முழுவதும் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று முடியும் நிலையில் உள்ளது.

இந்நிலையில், கும்பாபிஷேகம் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 28- ஆம் தேதி நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டிருப்பதை அடுத்து, விழாவின் தொடக்கப் பணியாக புதன்கிழமை (நவ.26) காலை 9 மணிக்கு கோயில் வளாகத்தில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.