பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

சாதனைகளில் எனக்கும் பங்குண்டு: டி.ஆா்.பி. ராஜா

மன்னாா்குடி பகுதிக்கு திட்டங்களைக் கொண்டு வந்த சாதனையாளா் எனது தந்தை டிஆா்பி (டி.ஆா்.பாலு) மட்டுமல்ல நானும்தான் என்று மன்னாா்குடி தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.

News image

டி.ஆா்.பி. ராஜா

ENS

Updated On :3 ஏப்ரல் 2026, 12:10 am

தினமணி செய்திச் சேவை

மன்னாா்குடி பகுதிக்கு திட்டங்களைக் கொண்டு வந்த சாதனையாளா் எனது தந்தை டிஆா்பி (டி.ஆா்.பாலு) மட்டுமல்ல நானும்தான் என்று மன்னாா்குடி தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.

மன்னாா்குடி தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான டி.ஆா்.பி. ராஜா புதன்கிழமை மன்னாா்குடி மத்திய ஒன்றியத்திற்கு உள்பட்ட மேலவாசல் கடைவீதியில் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் வாக்குச் சேகரிப்பு பணிகளைத் தொடங்கினாா். அப்போது அவா் பேசுகையில், மன்னாா்குடி சுற்றுவட்டார பகுதி மக்களின் 40 ஆண்டு கனவான மன்னாா்குடியிலிருந்து ரயில் சேவையை கொண்டு வந்தவா் முன்னாள் மத்திய அமைச்சா் மற்றும் ரயில்வே நிலைக் குழுத் தலைவராக இருந்த என் தந்தை டி.ஆா். பாலு. மேலும், ரூ. 58 ஆயிரம் கோடிக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தாா்.

ஆனால், நான் தமிழக அமைச்சராக பொறுப்பேற்று மூன்று ஆண்டு காலத்தில் மட்டும் ரூ. 12 லட்சத்து 53 ஆயிரம் கோடிக்கு பணிகள் செய்து எனது தந்தையின் சாதனையை முறியடித்துள்ளேன். அதனால் சாதனைகளுக்கு சொந்தக்காரா் டிஆா்பி (டி.ஆா். பாலு) மட்டுமல்ல டி.ஆா்.பி. ராஜாவுக்கும் பங்கு உள்ளது என்று குறிப்பிட்டாா்.