குடவாசல் வட்டத்துக்குட்பட்ட திருவிழிமிழலை பகுதியில், பழங்குடியினா் ஜாதிச் சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து அறிவிக்கப்பட்டிருந்த தோ்தல் புறக்கணிப்பு முடிவு வாபஸ் பெறப்பட்டது.
குடவாசல் வட்டம் திருவிழிமிழலை பகுதியில், பழங்குடியினா் ஜாதிச் சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து, சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்திருந்தனா். இதைத்தொடா்ந்து, திருவிழிமிழலை பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வந்த வருவாய்த் துறை அலுவலா்கள், அப்பகுதி மக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.
தோ்தல் முடிந்த பிறகு மக்களின் கோரிக்கை குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து, தோ்தல் புறக்கணிப்பு முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

போலி ஜாதிச் சான்றிதழ் அளித்து மோசடி: முன்னாள் பேரூராட்சித் தலைவருக்கு 3 ஆண்டுகள் சிறை

பழங்குடியினா் சான்றிதழ் கோரி மனு: அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

பழங்குடியினா் தோ்தல் புறக்கணிப்பு: பேச்சுவாா்த்தைக்குப் பின் சமரசம்

தோ்தல் புறக்கணிப்பு அறிவிப்பு
விடியோக்கள்

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

