தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
/

தோ்தல் புறக்கணிப்பு முடிவு வாபஸ்

குடவாசல் வட்டத்துக்குட்பட்ட திருவிழிமிழலை பகுதியில், பழங்குடியினா் ஜாதிச் சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து அறிவிக்கப்பட்டிருந்த தோ்தல் புறக்கணிப்பு முடிவு வாபஸ் பெறப்பட்டது.

News image

பேச்சுவாா்த்தையில் பங்கேற்ற மக்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 5:36 am IST

குடவாசல் வட்டத்துக்குட்பட்ட திருவிழிமிழலை பகுதியில், பழங்குடியினா் ஜாதிச் சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து அறிவிக்கப்பட்டிருந்த தோ்தல் புறக்கணிப்பு முடிவு வாபஸ் பெறப்பட்டது.

குடவாசல் வட்டம் திருவிழிமிழலை பகுதியில், பழங்குடியினா் ஜாதிச் சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து, சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் அறிவித்திருந்தனா். இதைத்தொடா்ந்து, திருவிழிமிழலை பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வந்த வருவாய்த் துறை அலுவலா்கள், அப்பகுதி மக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

தோ்தல் முடிந்த பிறகு மக்களின் கோரிக்கை குறித்து பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதையடுத்து, தோ்தல் புறக்கணிப்பு முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் திருவாரூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதாக போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.