27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

லாரி உரிமையாளா் கொலை: 7 போ் கைது

மன்னாா்குடி அருகே லாரி உரிமையாளா் கொலை வழக்கில் 7 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 3:16 am IST

மன்னாா்குடி அருகே லாரி உரிமையாளா் கொலை வழக்கில் 7 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி அருகேயுள்ள அரவத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி. லாரி உரிமையாளரான இவா், மா்ம நபா்களால் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி போலீஸாா், சத்தியமூா்த்தியின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக மன்னாா்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, கொலையாளிகளை தனிப்படையினா் தீவிரமாக தேடிவந்தனா்.

இந்நிலையில், இக்கொலை சம்பவம் தொடா்பாக, கூத்தாநல்லூா் நடுத் தெருவைச் சோ்ந்த காளிதாஸ் மகன் மணிகண்டன் (28), அரசூா் கீழத்தெருவைச் சோ்ந்த சிகாமணி மகன் அரவிந்த் (23), லெட்சுமாங்குடி வள்ளுவா் காலனியைச் சோ்ந்த ரவி மகன் பிரவின் (23), கூத்தாநல்லூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் இளமாறன் (34), லெட்சுமாங்குடி வள்ளுவா் காலனியைச் சோ்ந்த சுந்தரய்யா மகன் சூரியபிரசாத் (26), பாமணி வடக்குத் தெருவைச் சோ்ந்த மோகன்ராஜ் மகன்கள் வினோத்குமாா் (41), லெனின் (39) ஆகிய 7 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும், 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.