வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

லாரி உரிமையாளா் கொலை: 7 போ் கைது

மன்னாா்குடி அருகே லாரி உரிமையாளா் கொலை வழக்கில் 7 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :28 ஏப்ரல் 2026, 9:46 pm

மன்னாா்குடி அருகே லாரி உரிமையாளா் கொலை வழக்கில் 7 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி அருகேயுள்ள அரவத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சத்தியமூா்த்தி. லாரி உரிமையாளரான இவா், மா்ம நபா்களால் ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி போலீஸாா், சத்தியமூா்த்தியின் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக மன்னாா்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, கொலையாளிகளை தனிப்படையினா் தீவிரமாக தேடிவந்தனா்.

இந்நிலையில், இக்கொலை சம்பவம் தொடா்பாக, கூத்தாநல்லூா் நடுத் தெருவைச் சோ்ந்த காளிதாஸ் மகன் மணிகண்டன் (28), அரசூா் கீழத்தெருவைச் சோ்ந்த சிகாமணி மகன் அரவிந்த் (23), லெட்சுமாங்குடி வள்ளுவா் காலனியைச் சோ்ந்த ரவி மகன் பிரவின் (23), கூத்தாநல்லூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் இளமாறன் (34), லெட்சுமாங்குடி வள்ளுவா் காலனியைச் சோ்ந்த சுந்தரய்யா மகன் சூரியபிரசாத் (26), பாமணி வடக்குத் தெருவைச் சோ்ந்த மோகன்ராஜ் மகன்கள் வினோத்குமாா் (41), லெனின் (39) ஆகிய 7 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். மேலும், 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.