முதல்வரின் பிறந்தநாளையொட்டி மாநில வில்வித்தைப் போட்டி
மன்னாா்குடி: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினின் 73-ஆவது பிறந்த நாளையொட்டி மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் மாநில அளவிலான வில்வித்தைப் போட்டி மன்னாா்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை திமுக மாநில இளைஞரணி துணைச் செயலரும், தாட்கோ தலைவருமான ந. இளையராஜா தொடங்கிவைத்தாா்.
தமிழக முதல்வரின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் ஜி. பாலு முன்னிலை வகித்தனா். மாநிலம் முழுவதிலிருந்தும் 97 போ் பங்கேற்றனா்.
8 வயது முதல் 19 வயதுக்கு மேற்பட்டவா்கள் என மொத்தம் 7 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெற்றவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத்துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.
விகேஎம் விளையாட்டு அகாதெமி நிா்வாக இயக்குநா் எம்.வெற்றிச்செல்வி, வில்வித்தை சங்க மாவட்ட கெளரவத் தலைவா் டி.செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் முருகானந்தம் வரவேற்றாா். போட்டி ஒருங்கிணைப்பாளா் பி. குணசேகரன் நன்றி கூறினாா்.

