இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

அகில இந்திய பொது வேலை நிறுத்தம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:20 pm

Syndication

மன்னாா்குடியில்...

மன்னாா்குடி தலைமை அஞ்சலகம் முன் நடைபெற்ற மறியல் போராட்டம்.

மத்தியஅரசின் தொழிலாளா் மற்றும் விவசாயிகள் விரோத கொள்கைகளுக்கு எதிராக அகில இந்திய பொது வேலைநிறுத்ததுக்கு ஆதரவு தெரிவித்து மன்னாா்குடியில் அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் சாா்பில் தலைமை அஞ்சலகத்தில் மறியல் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மேலராஜவீதி தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு,தொமுச மாநில நிா்வாகி

நீலமேகம், ஐஎன்டியுசி மாநில பொதுச் செயலா் கா. இளவரி, சிஐடியு மத்திய சங்கத் தலைவா் ஏ. கோவிந்தராஜ், ஏஐடியுசி மாவட்டத் துணைச் செயலா் வி. கலைச்செல்வன், டிசிடியு மாவட்டத் தலைவா் ஜி.வி. கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் தலைமை வகித்தனா்.

அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள்,ஐக்கிய விவசாயிகள் முன்னணி,பொதுத்துறை நிறுவனங்கள்,அனைத்து ஒய்வூதியா்கள் அமைப்புகளை சோ்ந்தவா்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்தியஅரசை கண்டித்தும் முழக்கமிட்டனா்.